மழை நாட்கள்


முதல் துளியில்
வானம் நடுங்கியது
சலனமற்ற நிலபரப்பில்
ஆரவாரங்கள் செய்தன சாரல்


வெப்ப அலைகளை
காற்றில் பரப்பி
புரண்டு கொள்கிறது மண்



அற்புதங்களின் நிலையாமையை
சொல்லும் நோக்கத்தில்
வளைந்து நிற்கிறது வானவில்


மேகத்தின் மனதை கூறுவதற்கு
ஈரமுடன் வீசுகிறது காற்று

என்னையும் அழைத்து செல்லுங்கள்
என்று அழுது வடியும் ஜன்னல்கள்

இவை அனைத்தையும் ரசித்திடவே
விடுமுறை வேண்டுகிறேன் மழை நாட்களில் ...!



Comments